துபாயில் தொழிலாளர்களுக்காக சிறப்புக் கலை நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் இந்திய கன்சுலேட், தொழிலாளர் விவகாரத்துறை நிரந்தர சிறப்புக் கமிட்டி மற்றும் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமத்தின் சார்பில் 20.11.2009ம் தேதி சோனாப்பூர் அஸ்கான் தொழிலாளர் முகாமில் சிறப்புக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி துவக்கி வைத்தார். டாக்டர் மல்லிகா சாராபாய் தலைமையிலான குழுவினர் தாயகத்தைப் பிரிந்து தொழிலாளர்கள் விழிப்புணர்வு பெறும் வண்ணம் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமத்தின் நலத்துறையின் மேலாளர் முஹைதீன் பாட்சா தலைமையிலான குழுவினர் தொழிலாளர் முகாமின் நிர்வாகிகளுடன் இணைந்து செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து நிகழ்ச்சியினை ரசித்தனர். மாலையில் ஈடிஏ அஸ்கான் ஹெச்.ஆர்.எம்., எம்.என்.இ. ஜெபல் அலி தொழிலாளர் முகாமில் இக்கலை நிகழ்ச்சி நடைபெற்றது.













Click it and Unblock the Notifications