அறிவுக் களஞ்சியம் விருதுப் போட்டி- விண்ணப்பிப்போர் கவனத்திற்கு
சென்னை: தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படவுள்ள அறிவுக் களஞ்சியம் விருது-2010 போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வருகிற 20ம் தேதிக்குள் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12ம் தேதி ஆண்டுதோறும் தேசிய இளைஞர் தினமாக
கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, இளைஞர்களுக்கான அறிவுக் களஞ்சியம் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
எம்.டி.எஸ். அகாடமியும், நேரு யுவகேந்திராவும் இணைந்து இதற்கான போட்டிகளை நடத்துகின்றன.
ஜனவரி 3ம் தேதி பேச்சு, கட்டுரை, கவிதை எழுதுதல் உள்ளிட்ட 12 பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டிகளில் அதிக மதிப்பெண் பெறுவோர் அறிவுக் களஞ்சியம் விருதுக்கு தேர்வு செய்யப்படுவர்.
11ம் வகுப்புக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் இந்த போட்டிகளில் பங்கேற்கலாம்.
போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் தங்களது விவரங்களை வரும் 20ம் தேதிக்குள் எம்.டி.எஸ். அகாதெமியில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.
மேலும் விவரம் வேண்டுவோர் 044- 24951415 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications