பர்மா தலைநகர் யாங்கோனில் அண்ணா நூற்றாண்டு விழா
Subscribe to Oneindia Tamil
யாங்கோன்: மியான்மர் தலைநகர் யாங்கோனில் தமிழர்கள் அண்ணா நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா 29.11.2009ம் நாள் காலை 10.00மணிக்குத் தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியாக பேரறிஞர் அண்ணா கண்காட்சி அரங்கம் திறக்கப்பெற்றது.
காலை 10.30 மணிக்கு கருத்தரங்கம் இடம்பெற்றது. பகல் 12.00 மணி முதல் 1.3 0வரை உணவு உபசரிப்பு அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாலை 3.30 மணிக்கு பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா பல்வேறு சமயம் சார்ந்த தமிழர்கள் கலந்து கொள்ள அண்ணாவின் புகழ்மணங்கமழ சிறப்புடன் கொண்டாடப்பெற்றது.
மாலை 6.30 மணிக்கு அண்ணாவின் புகழ் என்றும் சிறக்க ஒலித்து விழா நிறைவெய்தியது.
இந்த செய்தியை சோலை. தியாகராஜன் அளித்துள்ளார்.













Click it and Unblock the Notifications