ரிதம் ஈவன்ட்ஸ் ஏற்பாட்டில் சென்னையில் 'ஐபிஎல் குடும்பம்'
துபாயில் பல்வேறு சமூக நல நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்திக் கொடுத்து வரும் ரிதம் ஈவன்ட்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டின் பேரில் டி.வி.வரதராஜனின் ஐபிஎல் குடும்பம் நாடகம் சென்னையில் நடத்தப்பட்டது.
சென்னை வாணி மஹாலில் அக்டோபர் 24ம் தேதி இது நடந்தது. இதில் கிடைத்த வருவாயை அறக்கட்டளைக்கு தானமாக அளிக்கின்றனர்.
ரிதம் ஈவன்ட்ஸ் நிறுவன இயக்குநர்கள் சபேசன் (துபாய் தமிழ்ச் சங்க நிறுவனர்), சந்திரா ரவி (துபாய் தமிழ்ச் சங்க நிறுவனர், காப்பாளர், செயலாளர்) ஆகியோர் இதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
நடிகர்-இயக்குநர் பாக்கியராஜ், இசையமைப்பாளர்கள் கங்கை அமரன், கணேஷ், தேனிசைத் தென்றல் தேவா, பின்னணிப் பாடகர் தீபன் சக்கரவர்த்தி, பாரதி காவலர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நாடகத்தில் பங்கேற்ற கலைஞர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், சிறப்பு விருந்தினர்களை ரிதம் ஈவன்ட்ஸ் இயக்குநர்கள் கெளரவித்தனர்.













Click it and Unblock the Notifications