சென்னையில் சர்வதேச பேஷன் வாரம் - 16ம் தேதி தொடக்கம்
சென்னை: சென்னை சர்வதேச பேஷன் வாரம் டிசம்பர் 16ம் தேதி தொடங்குகிறது. 20ம் தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உலகப் புகழ் பெற்ற டிசைனர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். ஏகப்பட்ட பூணை நடை கோலாகலங்களும் அரங்கேறவுள்ளது.ஐந்து நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த பேஷன் விழா, சென்னை லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் நடைபெறுகிறது. இதில் 10 நாடுகளைச் சேர்ந்த பேஷன் டிசைனர்கள் கலந்து கொள்கின்றனர்.
மொத்தம் 25 பேஷன் ஷோக்கள் நடைபெறும். இதில் 1200 புதிய தயாரிப்புகள் அணிவகுப்பில் இடம் பெறும்.
பிரபல டிசைனவர்களான சிட்னி ஸ்லேடனின் தயாரிப்புகளை பிரபலப்படுத்த நீல் நிதின் முகேஷ் பூணை நடை போட வருகிறார். இஷிதா சிங்குக்காக ஜெனீலியா டிசவுசா பூனை நடை போடவுள்ளார்.
இவர்கள் தவிர சுஷ்மிதா சென், கொய்னா மித்ரா, அலிசியா ராத், நமீதா, அனார்கலி அக்ஷரா, இந்திராணி தாஸ்குப்தா ஆகியோரும் பங்கேற்று ரேம்ப் வாக்கை சூடேற்றவுள்ளனர்.
மேலும், 20 திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்கும் 26 பேஷன் ஷோக்களும் கூட களை கட்டவுள்ளதாம்.
அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், இலங்கை, துபாய், மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுளைச் சேர்ந்த பிரபல டிசைனர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தியாவிலிருந்து சிட்னி ஸ்லேடன், நீத்தா லல்லா, விக்ரம் பான்டிஸ், சத்யா பால், ரிஹானே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்திய டிசைனர்களின் திறமையை வெளி நாடுகளுக்குப் பறை சாற்றவே இந்த சர்வதேச பேஷன் வாரம் கொண்டாடப்படுகிறதாம்.