கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் அரவாணிகளும் பயனடையலாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் அரவாணிகளும் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் சென்னையில் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஷோபனா வெளியிட்டுள்ள அறிவிப்பு:
உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள அரவாணிகளும் பயன்பெறும் வகையில் வருகிற 16ம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.
சென்னை கலெக்டர் அலுவலக 8வது மாடியில் காலை 10 மணி முதல் இதற்கான புகைப்படம் எடுக்கப்படும். இதில் கலந்துகொள்ள வரும் அரவாணிகள் மாவட்ட சமூக நல அலுவலர் மூலமாக வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது ரேஷன்கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications