கொடைக்கானல் - பலத்த காற்று காரணமாக படகு சவாரிக்கு தடை
Subscribe to Oneindia Tamil
கொடைக்கானல்: கொடைக்கானலில் பலத்த காற்று காரணமாக படகுகளில் சவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்கள் விரும்பி செல்லும் சுற்றுலா மையங்களில் கொடைக்கானல் முதன்மை பெற்றது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி
மக்கள் வந்து குவிந்த வண்ணம் இருப்பவர்.
தமிழக சுற்றுலாத்துறை, நகராட்சி,போட்கிளப் சார்பில் படகுகள் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில், கொடைக்கானலில் வழக்கத்திற்கு மாறாக வேகமாக காற்று வீசி வருகின்றது.
இதனால், ஏரியில் குறிப்பிட்ட சில படகுகளில் சவாரி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications