விஜய் டிவியின் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்!

கிறிஸ்துமஸ் காலத்தில் இயேசு கிறிஸ்துவின் வருகை குறித்து பாடகர் குழுவினர் கேரல் பாடுவது வழக்கம். இதை ஆச்சி மசாலா நிறுவனத்தினர் ஒரு பாட்டுப் போட்டியாக தேவாலயம், கல்லூரி மற்றும் பள்ளிக் கூடங்களில் இருந்து வரும் பாடகர், குழுவினரை பாட வைத்து தொலைகாட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுகுறித்து ஆச்சி மசாலா நிர்வாக இயக்குனர் பத்மசிங் ஐசக் கூறுகையில், "இந்த நிகழ்ச்சி என் மனைவி தெல்மா ஐசக் மற்றும் மகன்கள் அஸ்வின் பாண்டியன், அபிஷேக் ஆபிரகாம் ஆகியோருடைய 2 ஆண்டு கால முயற்சியில் உருவாக்கப்பட்டதாகும். இந்த நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சி மூலமாக முதல் முறையாக வரும் 24 மற்றும் 25ம் தேதி ஒளிபரப்பு ஆகிறது. இந்த நிகழ்ச்சியை இலங்கை, அமெரிக்கா, கனடா நாடுகளிலும் பார்க்க முடியும்..." என்றார்.
இந்த போட்டியில் வெற்றியாளர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு டாக்டர் சாமுவேல் ஜோசப், சிட்டி பிரகாஷ் தைரியம், சுசீலாசாரதி, சாந்தி சாலமன், கிரேஸ் கருணாஸ் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.
முதல் பரிசாக ஒவ்வொரு பிரிவு குழுவுக்கும் ரூ.50,000மும், 2ம் பரிசாக தலா ரூ.20,000மும் வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications