புவனகிரியில் ராகவேந்திரா சுவாமியின் 415 வது அவதார தின விழா!
Subscribe to Oneindia Tamil
புவனகிரி: புவனகிரியில் ராகவேந்திரா சுவாமியின் 415 வது அவதார தின விழாவில் பக்தர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
ராகவந்திரா சுவாமிகளின் அவதார ஸ்தலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரியில் உள்ளது.
இங்கு ராகவேந்திரரின் 415 வது அவதார தினம் 108 பால்குடங்களுடன் கொண்டாடப்பட்டது.
ராகவேந்திரர் வழிபட்ட ஆஞ்சநேயர் கோவில் வரை ஊர்வலமும், மிருத்திகா பிருந்தாவனத்தில் பாலாபிஷேகமும் நடைபெற்றது.
மேலும், சீர்காழி ஹரிணி குழுவினரின் இன்னிசை கச்சேரியும், கொளக்குடி நரசிம்ம ஆச்சார், ரகோத்தம ஆச்சார் தலைமையில் சொற்பொழிவும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. இந்த விழாவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications