அய்யா வைகுண்டர் பிறந்த நாள்- மார்ச் 4ல் நெல்லையில் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
Subscribe to Oneindia Tamil
நெல்லை: அய்யா வைகுண்டர் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயராமன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த விடுமுறைக்கு பதிலாக வரும் மார்ச் 13ம் தேதி அன்று இரண்டாவது சனிக்கிழமை வேலை நாளாக கருதப்படும் என மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் மார்ச் 4ம் தேதி நடைபெறும் பிளஸ்டூ பொது தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள நெல்லை மாவட்ட முதன் கல்வி அலுவலர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. உள்ளூர் விடுமுறை நாளான்று நெல்லை மாவட்ட கரூவூலம் மற்றும் அனைத்து சார்நிலை கருவூலங்களும் அவசர பணிகளை கவனிப்பதற்காக செயல்படும்.












Click it and Unblock the Notifications