துபாய் ரிதம் ஈவன்ட்ஸ் வழங்கும் மாபெரும் இசை விருந்து
துபாய்: துபாயைச் சேர்ந்த ரிதம் ஈவன்ட்ஸ் நிறுவனம் துபாய் வாழ் தமிழர்களுக்காக மாபெரும் இசை விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
துபாய் வாழ் தமிழர்களுக்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளையும் பிற நிகழ்ச்சிகளையும், சமூக சேவையையும் செய்து வரும் நிறுவனம் ரிதம் ஈவன்ட்ஸ்.
மார்ச் 19ம் தேதி மாபெரும் இசை நிகழ்ச்சிக்கு ரிதம் ஈவன்ட்ஸ் ஏற்பாடு செய்துள்ளது.
துபாய் இந்தியன் உயர்நிலைப்பள்ளியில் உள்ள ஷேக் ரஷீத் ஆடிட்டோரியத்தில் இந்த மாபெரும் இசை விழா நடைபெறுகிறது.
மாலை 5 மணிக்கு விழா தொடங்குகிறது. ரிதம் ஈவன்ட்ஸ் சார்பில் அதன் இயக்குநரான, துபாய் தமிழ்ச் சங்க நிறுவன காப்பாளர், செயலாளர் சந்திரா ரவி மற்றும் துபாய் தமிழ்ச் சங்க, நிறுவனத் தலைவரும், ரிதம் நிறுவனத்தின் இயக்குநருமான சபேசன் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.
பிரபல பின்னணிப் பாடகர் மனோ, பின்னணிப் பாடகி அனுராதா ஸ்ரீராம் ஆகியோர் பங்கேற்று பாடுகின்றனர்.
இவர்களுடன் கோலங்கள் புகழ் ஷியாம், கீபோர்டு கலைஞர் பிரகாஷ், பாடகி பிரியா, கலக்கப் போவது யாரு புகழ் சேது, அசத்தப் போவது யாரு புகழ் கிரி ஆகியோரின் கலக்கல் காமெடி நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
டிக்கெட் மற்றும் பிற விவரங்களுக்கு சந்திரா ரவி - 050-6370472 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ரவி தகவல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications