ஊனமுற்றோர் நலத்துறை அலுவலகப் பெயர்கள் மாற்றுத்திறனாளிகள் என மாற்றம்
சென்னை: ஊனமுற்றோர் என்ற பெயரில் இயங்கும் அலுவலகங்களின் பெயர்கள் மாற்றுத்திறனாளிகள் என்ற புதிய பெயரில் மாற்றப்பட்டு இயங்கும் என முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2007-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை விவாதித்து மேற்கொண்ட முடிவிற்கிணங்க, தமிழகத்தில் ஊனமுற்றோர்' என்ற சொல்லால் அழைக்கப்படுபவர்கள் இனி மாற்றுத் திறனாளிகள் என அழைக்கப்படுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து 2010-2011-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துறை முதல்-அமைச்சர் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டதற்கேற்ப ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்டது.
அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிற, ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் அலுவலகம் இனி மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம்'' எனவும், தமிழ்நாடு ஊனமுற்றோர் நல வாரியம் இனி, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் எனவும் குறிப்பிடப்படும்.
ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் இனி, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் எனவும், மாவட்ட ஊனமுற்றோருக்கான மறுவாழ்வு அலுவலர் இனி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எனவும் குறிப்பிடப்படுவார்கள் என்றும் முதல்வர் கருணாநிதி நேற்று ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக, முதல்வரின் நேரடி மேற்பார்வையில் தனித்துறை உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட துறையிடம் இருந்து மாற்றுத் திறனாளிகள் நலன் தொடர்பான இனங்கள் தனியே பிரிக்கப்பட்டு, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தலைமைச் செயலகத்தில், இந்த தனித்துறையை உருவாக்கவும், தனியாக ஒரு செயலாளரை நியமிக்கவும் உத்தரவிட்டது.
அதன்படி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ்.ஜவகர் அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications