பொன்விழா காணும் திருத்தணி மீட்புப் போராட்டம்
1953ம் ஆண்டு மொழி வாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அப்போது தமிழர்கள் அதிகம் வசித்து வந்த திருத்தணி தாலுகாவை பிரித்து ஆந்திராவுடன் இணைத்து விட்டனர்.
இதையடுத்து திருத்தணியை மீட்கும் போராட்டம் உருவெடுத்த்து. மல்லங்கிழார் என்பவரின் தலைமையில் இந்தப் போராட்டம் வெடித்த்து. பின்னர் மல்லங்கிழார் உயிர் நீக்கவே, மறைந்த ம.பொ.சிவஞானம் தலைமையில் போராட்டம் வீறு கண்டெழுந்த்து.
பலரின் உயிர் துறப்புகள், ஆவேசப் போராட்டங்கள் காரணமாக 1960ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உத்தரவுப்படி பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு திருத்தணி மீண்டும் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.
இதையடுத்து 1960ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி திருத்தணியை தமிழகத்துடன் ஒப்படைக்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் காமராஜர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர் பக்தவச்சலம் திருத்தணி தாலுகாவை முறைப்படி பெற்றுக் கொண்டார்.
வடக்கெல்லை மீட்பு என்று அழைக்கப்படும் திருத்தணி மீட்புப் போராட்டத்தின் விளைவாக திருத்தணி தமிழகத்துடன் இணைந்த்தன் 50வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.