மதுரை பல்கலைக்கழகத்தில் 3 மாத அக்குபஞ்சர் தெரபி பயிற்சி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வயது வந்தோர் தொடர் கல்வி மற்றும் விரிவுப்பணித்துறை இயக்குனர் முத்துலெட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மாணவ, மாணவிகள், படித்த வேலையற்ற இளைஞர்கள், இளம்பெண்களுக்கான அக்குபஞ்சர் சிகிச்சைக்கான பயிற்சி ஏப்ரல் 21ம் தேதி முதல் துவக்கப்பட உள்ளது.
தற்போது நேரடி சேர்க்கை நடக்கிறது. வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் பயிற்சி நடத்தப்படும். 10ம் வகுப்பு தேறியவர்கள், அதற்கு மேல் படித்தவர்கள் தகுதியானவர்கள்.
சீன மருத்துவத்தின் வகைப்பாடுகள், அக்குபஞ்சர் சிகிச்சை முறை, இயற்கை மருத்துவம், யோகா உணவு சிகிச்சை, மனித உடல் அமைப்பு, முக்கிய நோய்கள் குறித்து விளக்கம் அளி்க்கப்படும். செய்முறை பயிற்சியுடன் அனுபவ பயிற்சியும் உண்டு.
மாணவ, மாணவிகள் அக்குபஞ்சர் மருத்துவ மையங்களை பார்வையிட அழைத்து செல்லப்படுவர். பயிற்சி முடிவில் பல்கலைக்கழக சான்றிதழ், முதலுதவி பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சிக்கான விண்ணப்பங்களை பெற இயக்குனர் (பொறுப்பு) வயது வந்தோர் தொடர் கல்வி மற்றும் விரிவுபணித்துறை, மதுரை காமராஜர் பல்கலை கழகம், மாலை நேர கல்லூரி வாளகம், பாண்டியன் ஓட்டல் எதிர்புறம், மதுரை-625002 என்ற முகவரிக்கு ரூ.50க்கான கட்டண தொகையை மணியார்டர் மூலம் அனுப்ப வேண்டும்.
மணியார்டர் படிவத்தில் தெளிவான வீட்டு முகவரி, அக்குபஞ்சர் தெரபி பயிற்சி என குறிப்பிட்டு, சுய விலாசமிட்ட ரூ.5 மதிப்பிலான தபால் வில்லை ஒட்டிய அலுவலக கவரையும் இணைத்து அனுப்ப வேண்டும்.












Click it and Unblock the Notifications