குத்துச்சண்டை போட்டி - தமிழக வீரர் அக்பர் வெற்றி !
Subscribe to Oneindia Tamil
கடலூர் : குத்துச்சண்டைக்கான, ஹெவி வெயிட் சாம்பியன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அக்பர் வெற்றி வாகை சூடினார்.
தமிழ்நாடு தொழில்முறை குத்துச்சண்டை சங்கம் சார்பில், தென்னிந்திய அளவிலான குத்துச்சண்டை போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இந்த விளையாட்டிற்கு, சங்கத் தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். புதுச்சேரி பல்கலைக் கழக விளையாட்டு அலுவலர் சந்திரசேகர் துவக்கி வைத்தார்.
போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றனர்.
இதில், 10 பிரிவுகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. ஹெவி வெயிட் சாம்பியன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அக்பர் வெற்றி வாகை சூடினார்.
வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம், கடலூர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் ஆகியோர் கேடயங்கள் வழங்கி பாராட்டி , பரிசு வங்கினர்.












Click it and Unblock the Notifications