மே 21 முதல் 23 வரை திருச்சியில் உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு!
திருச்சி: மே 21ம் தேதி முதல் மே 23ம் தேதி வரை உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இது குறித்து திருச்சி- தஞ்சை மண்டல பேராயர் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி தலைவர் பால் வசந்தகுமார், உலக கிறிஸ்தவ தமிழ்ச் சங்க செயல் தலைவர் ஏசுதாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ் ஆர்வலர்கள் விருப்பத்தின் பேரில், கிறிஸ்தவ இலக்கியம் வளர்ச்சி பெற கிறிஸ்தவ தமிழ் இலக்கியங்களை மேம்படுத்த, உலக கிறிஸ்தவத் தமிழ்ப் பேரவை, 1981ல் முன்னாள் பிரதம பேராயர் சாலமன் துரைசாமியால் துவக்கப்பட்டது
ஆறாவது கிறிஸ்தவ உலக தமிழ் மாநாடு, மே 21ம் தேதி முதல் மே 23ம் தேதி வரை, திருச்சி-தஞ்சை மண்டல பேராயர் பால் வசந்தகுமார் தலைமையில் பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இதன் துவக்க விழாவில் மத்திய அமைச்சர் ராஜா, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கே.என். நேரு, வனத்துறை அணைச்சர் என். செல்வராஜ், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா, பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் பொன்ன வைக்கோ, வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரகுமான் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
மாநாட்டில் கிறிஸ்தவ இலக்கிய சங்கம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.
கோவையில் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டில் கிறிஸ்தவ தமிழ் இலக்கியத்துக்காக அரசிடம் தனி இடம் கோரப்பட்டுள்ளது என்றார்.
முதல் உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு திருச்சியில் 1981ம் ஆண்டு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருமுறையும், சென்னையில் இரு முறையில் மாநாடு நடந்தது. கடைசியாக, 1996 ம் ஆண்டு நியூயார்க் நகரில் மாநாடு நடைபெற்றது குறிப்பிடதக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications