மே 21 முதல் 23 வரை திருச்சியில் உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு!
திருச்சி: மே 21ம் தேதி முதல் மே 23ம் தேதி வரை உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இது குறித்து திருச்சி- தஞ்சை மண்டல பேராயர் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி தலைவர் பால் வசந்தகுமார், உலக கிறிஸ்தவ தமிழ்ச் சங்க செயல் தலைவர் ஏசுதாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ் ஆர்வலர்கள் விருப்பத்தின் பேரில், கிறிஸ்தவ இலக்கியம் வளர்ச்சி பெற கிறிஸ்தவ தமிழ் இலக்கியங்களை மேம்படுத்த, உலக கிறிஸ்தவத் தமிழ்ப் பேரவை, 1981ல் முன்னாள் பிரதம பேராயர் சாலமன் துரைசாமியால் துவக்கப்பட்டது
ஆறாவது கிறிஸ்தவ உலக தமிழ் மாநாடு, மே 21ம் தேதி முதல் மே 23ம் தேதி வரை, திருச்சி-தஞ்சை மண்டல பேராயர் பால் வசந்தகுமார் தலைமையில் பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இதன் துவக்க விழாவில் மத்திய அமைச்சர் ராஜா, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கே.என். நேரு, வனத்துறை அணைச்சர் என். செல்வராஜ், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா, பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் பொன்ன வைக்கோ, வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரகுமான் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
மாநாட்டில் கிறிஸ்தவ இலக்கிய சங்கம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.
கோவையில் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டில் கிறிஸ்தவ தமிழ் இலக்கியத்துக்காக அரசிடம் தனி இடம் கோரப்பட்டுள்ளது என்றார்.
முதல் உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு திருச்சியில் 1981ம் ஆண்டு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருமுறையும், சென்னையில் இரு முறையில் மாநாடு நடந்தது. கடைசியாக, 1996 ம் ஆண்டு நியூயார்க் நகரில் மாநாடு நடைபெற்றது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications