மே 21 முதல் 23 வரை திருச்சியில் உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு!
திருச்சி: மே 21ம் தேதி முதல் மே 23ம் தேதி வரை உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இது குறித்து திருச்சி- தஞ்சை மண்டல பேராயர் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி தலைவர் பால் வசந்தகுமார், உலக கிறிஸ்தவ தமிழ்ச் சங்க செயல் தலைவர் ஏசுதாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ் ஆர்வலர்கள் விருப்பத்தின் பேரில், கிறிஸ்தவ இலக்கியம் வளர்ச்சி பெற கிறிஸ்தவ தமிழ் இலக்கியங்களை மேம்படுத்த, உலக கிறிஸ்தவத் தமிழ்ப் பேரவை, 1981ல் முன்னாள் பிரதம பேராயர் சாலமன் துரைசாமியால் துவக்கப்பட்டது
ஆறாவது கிறிஸ்தவ உலக தமிழ் மாநாடு, மே 21ம் தேதி முதல் மே 23ம் தேதி வரை, திருச்சி-தஞ்சை மண்டல பேராயர் பால் வசந்தகுமார் தலைமையில் பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இதன் துவக்க விழாவில் மத்திய அமைச்சர் ராஜா, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கே.என். நேரு, வனத்துறை அணைச்சர் என். செல்வராஜ், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா, பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் பொன்ன வைக்கோ, வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரகுமான் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
மாநாட்டில் கிறிஸ்தவ இலக்கிய சங்கம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.
கோவையில் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டில் கிறிஸ்தவ தமிழ் இலக்கியத்துக்காக அரசிடம் தனி இடம் கோரப்பட்டுள்ளது என்றார்.
முதல் உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு திருச்சியில் 1981ம் ஆண்டு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருமுறையும், சென்னையில் இரு முறையில் மாநாடு நடந்தது. கடைசியாக, 1996 ம் ஆண்டு நியூயார்க் நகரில் மாநாடு நடைபெற்றது குறிப்பிடதக்கது.
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications