திருச்செந்தூர்- மே 27ல் வைகாசி விசாக திருவிழா

அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 18ம் தேதி துவங்கியது.
தினமும் பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாரதனை முடிந்ததும், சுவாமி ஜெயநதிநாதர், வள்ளி, தெய்வணையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்ந்தார். அங்கு உபயதாரர் சார்பில் அபிஷேகம் அலங்காரம் தீபாரதனை நடைபெறுகிறது. பின்னர் 11 வசந்த மண்டபத்தை சாமி உலா வந்து தங்க தேரில் எழுந்தருளி கோயிலை அடையும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
முக்கிய விழாவான வைகாசி விசாக திருவிழா மே 27ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப திபாரதனை நடக்கிறது. அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாரதனை நடக்கிறது.
உச்சிகால பூஜை முடிந்ததும் சாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்திற்கு வந்து முனிகுமாரர்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.












Click it and Unblock the Notifications