துபாயில் அமீரகத் தமிழர்கள் அமைப்பு நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி
நிகழ்சிக்கு வந்தவர்களை அமீரகத் தமிழர்கள் அமைப்பின் நிர்வாகிகள் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் பின் தாஸ்மால் குரூப் நிர்வாக இயக்குனர் முஹம்மது தாஸ்மால், ஈ.டி.ஏ. குழும நிறுவனத்தைச் சார்ந்த மீரான், பாலசுப்ரமணியம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.
மேலும், ஈமான் அமைப்பின் கீழை ஹமீது யாசின், வளைகுடாத் தமிழர் பேரவையின் அன்வர் பாஷா, குற்றாலம் அஷ்ரப் அலி, அமீரகத் தமிழ் மன்றத்தின் பாரூக் அலியார், ஜெஸிலா ரியாஸ், வானலை வளர்தமிழ் அமைப்பின் ராஜாகான், முகில், தாய்மண் வாசகர் வட்டத்தின் செ.ரெ. பட்டினம் மணி, முத்தமிழ், ஏகத்துவ மெய்ஞான சபையின் கிளியனூர் இஸ்மத், சுடர்வம்சம் ரகுராஜ், சுப்பு, அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவையின் தலைவர் அப்துல் கதீம் மற்றும் புரவலர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தோருக்கு அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன் நன்றி தெரிவித்தார்.
பெருநாள் அன்பளிப்புகள் வழங்கல்
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் சார்பில் ஈக்காடுதாங்கல் பள்ளிவாசலில் ஏழை எளியோருக்கு பெருநாள் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. அவற்றைத் தொண்டு இயக்கத் தலைவர் கே.ஏ. மன்சூர் ஹாஜி தலைமையில் நிர்வாகிகள் பூவை ரசாக், பூம்புகார் ஹாஜா, ஷர்புத்தீன், பெரோஸ்பாய், அஜ்மல் கான் மற்றும் பலர் வழங்கினர்.













Click it and Unblock the Notifications