கிளிநொச்சி பள்ளிகளுக்கு கற்றல் உபகரணங்கள்- கனடா வாழ் தமிழர்கள் வழங்கினர்
Subscribe to Oneindia Tamil
கிளிநொச்சி : கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த பள்ளிகளுக்கு கனடாவாழ் புலம்பெயர் தமிழர்கள் கற்றல் உபகரணங்களை வழங்கினர்.
இலங்கையில் போருக்கு பின்பு, அந்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு ஏராளமானோர் உதவிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த பள்ளிகளுக்கு கனடாவாழ் புலம்பெயர் தமிழர்களான மாசிலாமணி, தங்கவேலு, குகதாசன் ஆகியோர் கல்வி கற்க உதவும் நோட்டுகள், கணித உபகரணப் பெட்டிகள், எழுதுகோல்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்கினர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பள்ளிகளான கிளி. ஜயனார்புரம் அ.த.க பாடசாலை, வன்னேரிக்குளம் ம.வி குழழமுனை அ.த.க பாடசாலை ஆகியவற்றிற்கு கற்றல் உபகரணங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் வழங்கினார்.












Click it and Unblock the Notifications