பெரியாரின் குடியரசு தொகுதிகள் வெளியீடு
சென்னை: சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று பெரியாரின் குடியரசு தொகுதிகள் வெளியிடப்பட்டன.
பெரியார் திராவிடர் கழகத்தின் கொளத்தூர் மணி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், திருவாரூர் தங்கராசு இத்தொகுதிகளை வெளியிட, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் கொளத்தூர் மணி பேசுகையில், பெரியாரின் எழுத்து-பேச்சு மற்றும் அவரது நூல்களை வெளியிட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தடைகோரி வழக்குத் தொடுத்திருந்தார்.
இந்த வழக்கில் எவரும் பதிப்புரிமை கோர முடியாது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றத்தின் மேல் முறையீட்டு அமர்வு வழங்கியிருக்கிறது.
இது கருத்துரிமைக்கும், பரப்புரிமைக்கும் கிடைத்த வெற்றி என்றார்.
பெரியார் நடத்திய குடியரசு ஏட்டில் வெளியான அவரது எழுத்து, பேச்சுகளை தொகுத்து 11,000 பக்கங்கள் கொண்ட 27 குடியரசு தொகுதிகளுக்கும் 'ரிவோல்ட்' ஆங்கில தொகுதிக்கும் (பெரியார் 1928 முதல் 1930 வரை ஆங்கிலத்தில் நடத்திய இதழ்) சேர்த்து ரூ. 5,700 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.