கூந்தன்குளம் சரணாலயத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை
நாங்குநேரி தாலுகாவிலுள்ள கூந்தன்குளத்திற்கு ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாட்டு, வெளிமாநில பறவைகள் வருவது வழக்கம். இதுபோல் தற்போது நாங்குநேரி பெரிய குளத்திற்கு செங்கால் நரை, கூழைக்கிடா, கருத்தலைகொக்கு, கரண்டிவாயன் உள்பட ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளன.
இந்த பகுதியில் மரங்கள் இல்லாததால் இங்கு வரும் பறவைகள் பகல் நேரங்களில் குளத்திலுள்ள மணல் மேடுகளில் சிறிது நேரம் நின்று விட்டு பின்னர் மரங்கள் உள்ள பகுதியை தேடி செல்கின்றன.
குளத்தின் உட்பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன் வனத்துறையின் சமூக காடுகள் திட்டத்தின் கீழ் கருவேல மரங்கள் வளர்க்கப்பட்டன. அதிலுள்ள முட்கள் விவசாய பணிக்கு பாதிப்பு ஏற்படுவதாக வந்த எதிர்ப்பை அடுத்து மரங்கள் வெட்டப்பட்டன. தற்போது அந்த இடம் தரிசாகவே உள்ளது.
இந்த இடத்தில் முள்ளில்லா மரங்களை நட்டு வளர்த்தால் இங்கு வரும் வெளிநாட்டு பறவைகள் இங்கேயே கூடு கட்டு வாழ ஏதுவாக இருக்கும் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.