குற்றாலத்தில் இன்று படகு சவாரி தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்: குற்றாலத்தில் படகு சவாரி இன்று முதல் தொடங்கியுள்ளது.
தென்னிந்தியாவில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாநிலங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருவதால் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் தென்பொதிகை திருத்தலமான குற்றாலத்தில் ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளி்ட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதை தொடர்ந்து கீழவெண்ணமடை குளத்தில் அமைந்துள்ள படகு குழாம் நேற்று முழுமையாக நிரம்பியதையடுத்து இன்று காலை 9 மணிக்கு படகு சவாரி தொடங்கியுள்ளது. 15க்கும் மேற்பட்ட படகுகள் பல்வேறு மாடல்களில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications