குவைத் தமிழ் இஸ்லாமிய சங்க நிகழ்ச்சி
குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஜூலை 8, 9 தேதிகளில் இஸ்ராஃ மிஹ்ராஜ் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதில் முதலாம் நாள் நிகழ்ச்சி ஜூலை 8ம் தேதி மாலை 6.30 மணி முதல் குவைத் ஃபஹாஹீல், கத்ஆ 7, பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ (உர்தூ குத்பா) பள்ளி' பள்ளிவாசலில் நடைபெற இருக்கிறது.
இதற்கு சங்கத்தின் செயல் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ தலைமை தாங்குகிறார்.
சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதுடன் சங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்தும் சிற்றுரையாற்றுவார்.
சங்கத்தின் கொள்கை பரப்புக் குழு உறுப்பினர் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ, பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் எம். மஹ்பூப் பாஷா ரஷாதி மற்றும் சங்கத்தின் மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு உறுப்பினர் எச்.எம். அப்துர் ரஹ்மான் மழாஹிரி ஆகியோர் கலந்து கொண்டு இஸ்ரா, மிஃராஜ் மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா குறித்த முழுமையான வரலாறு போன்ற தலைப்புகளில் சிறப்புரையாற்றுகின்றனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி ஜூலை 9-ம் தேதி மாலை 6.30 மணி முதல் குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (உர்தூ குத்பா பள்ளி - KPTC பேரூந்து நிலையம் / லிபரேஷன் டவர் அருகில், சூக்குல் வதனிய்யா எதிரில்)' பள்ளிவாசலில் நடைபெறும்.
இதில் சங்கத்தின் மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு மூத்த உறுப்பினர்கள் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ, எம்.டி.எம். அஜ்வத் ரைவின்தி லாஹூரி (இலங்கை) மற்றும் எஃப். ஷேக் தாவூத் ஸிராஜி ஆகியோர் இஸ்ரா, மிஃராஜ் நிகழ்வின் அன்பளிப்பு, இஸ்லாமியர்களின் கடமைகள் போன்ற தலைப்புகளில் சிறப்புரையாற்றுகின்றனர்.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் இஸ்லாமிய பொது அறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும்.