துபாய் தமிழ்ச் சங்கம் கொண்டாடிய அமீரக தேசிய தினம்
துவக்கமாக அமீரக மற்றும் இந்திய தேசிய கீதம் பாடப்பட்டது. நிகழ்விற்கு துபாய் தமிழ்ச் சங்கத் தலைவி ஜெயந்திமாலா சுரேஷ் தலைமை வகித்தார்.
பொதுச்செயலாளர் சி. ஜெகந்நாதன் வரவேற்புரை ஆற்றினார்.
அதிமுக அமைப்புச் செயலாளர் ஈ.வி.கே. சுலோசனா சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில் துபாய் தமிழ்ச்சங்கத்தின் அமீரக தேசிய தினவிழாவில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக துபாய் தமிழ்ச் சங்கம் செயல்பட்டு வருவது பாராட்டத்தக்கது என்றார்.
இதில் ஷார்ஜா இந்தியா வர்த்தக மற்றும் கண்காட்சி டைரக்டர் ஜெனரல் ஸ்ரீபிரியா, இந்திய தூதரகத்தின் உதவி கன்சல் கணேஷ், நிறுவனப் புரவலர் ஏ. லியாக்கத் அலி உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
ரோஷினி மற்றும் அபிநயா ஆகியோர் திருக்குறள் வாசித்தனர்.
நிகழ்வினை மீரா கிரி மற்றும் ஏ. முஹம்மது தாஹா ஆகியோர் தொகுத்து வழங்கினர். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றோருக்கு சான்றிதழகள் வழங்கப்பட்டன. நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.