நெல்லை கலெக்டர் பங்களாவில் படையெடுத்து வந்த 9 பாம்புகள் பிடிபட்டன
நெல்லை: நெல்லை கலெக்டர் பங்களாவில் கொடிய விஷமுள்ள 9 பாம்புகள் பிடிப்பட்டன. பாம்பாட்டிகளை அழைத்து மகுடி ஊதி அவற்றை பிடித்தனர்.
நெல்லை கலெக்டர் பங்களா பாளை ஐகிரவுண்ட் சாலையில் அமைந்துள்ளது. இந்த பங்களாவை சுற்றியுள்ள பகுதியில் முட்புதர்கள் அதிகம் காணப்படுகிறது.
பங்களாவிற்கு பின்புறம் திறந்த வெளியாக இருப்பதால் மருத்துவக் கல்லூரி பகுதியில் உள்ள பாம்புகள் படையெடுத்து வந்து கலெக்டர் பங்களாவில் குடிபுகுந்து விடுகின்றன. இதையடுத்து பங்களாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் சுற்று சுவர் கட்டப்பட்டது. எனினும் பாம்புகள் வருகை நிற்கவில்லை. இரவு நேரங்களில் இரை தேட வரும் பாம்புகளை பார்த்து ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.
இதையடுத்து பாம்புகளை பிடிப்பதற்காக நரசிங்கநல்லூரில் இருந்து பாம்பாட்டி நேற்று காலை வரவழைக்கப்பட்டார். அவர் தனது மகுடியை ஊத பாம்புகள் ஒவ்வொன்றாக படையெடுத்து வந்தன. அனைத்தையும் பிடித்து தான் கொண்டு வந்த சாக்கு பையில் பாம்பாட்டி போட்டுக் கொண்டார்.
இந்த பாம்பு வேட்டையில் கொடிய விஷமுள்ள ஒரு கட்டு விரியன், 4 கட்டு விரியன் குட்டிகள், ஒரு நல்ல பாம்பு, 3 சாரை பாம்பு என மொத்தம் 9 பாம்புகள் பிடிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications