திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழா- செப் 7ம் தேதி தேரோட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவில் ஆவணி திருவிழா ஆண்டுதோறும் 12 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா இன்று 29ம் தேதி தொடங்கியது. காலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகியது விழா.
விழா நாட்களில் காலை மற்றும் மாலை சுவாமி அம்பாள் வீதியுலா நடக்கிறது. 7ம் நாள் திருவிழாவான செப் 4ம் தேதி சுவாமி ஆறுமுக நயினார் பிள்ளையான் மண்டகப்படியில் இருந்து தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி வீதியுலாவும், செப் 5ம் தேதி காலை 10.30 மணிக்கு சாமி ஆறுமுக நயினார் பச்சை சாத்தி சப்பரத்தில் வீதியுலாவும் நடக்கிறது. முக்கிய திருவிழாவான 7ம் தேதி காலை 5.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
கோயில் கலை அரங்கில் தினமும் பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, நாதஸ்வர கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பாஸ்கரன், அறங்காவலர் குழு தலைவர் தேவதாசசுந்தரம் உள்ளி்ட்ட பலர் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications