புரட்டாசி சனிக்கிழமை-தூத்துக்குடி நவதிருப்பதிக்கு சிறப்பு பஸ்கள்
நெல்லை: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிகளில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு உற்சவம் நடைபெறும். இதையொட்டி நெல்லையில் இருந்து நவ திருப்பதி கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக புரட்டாசியில் வரும் 5 சனிக்கிழமைகளும் சிறப்புப் பேருந்துகள் விடப்பட உள்ளன.
இந்தப் பேருந்துகள் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும். ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, பெருங்குளம், இரட்டை திருப்பதி, தென்திருப்போரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி, கருங்குளம், நாங்குநேரி, திருக்குறுங்குடி சென்று இரவில் நெல்லை வந்தடையும். இதற்கான பஸ் கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.250 ஆகும்.
நெல்லை புதிய பேருந்து நிலைய கவுன்டரில் கண்டனத் தொகையினை முழுமையாகச் செலுத்தி முன்பதிவு செய்யலாம். இதுதவிர பிரசித்திபெற்ற மற்ற பெருமாள் கோவில்களான திருவேங்கடநாதபுரம், கருங்குளம், எட்டெழுத்து பெருமாள் கோவில், நம்பி கோவிலுக்கு நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம்-அத்தாளநல்லூர், வீரவநல்லூர்-அத்தாளநல்லூருக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications