For Quick Alerts
For Daily Alerts
Just In
உடுமலைப்போட்டை அருகே கால்வாயில் மிதக்கும் யானை சடலம்: மீட்புப் பணியில் வனத்துறை
உடுமலைபேட்டை: உடுமலைப்பேட்டை அருகே உள்ள கான்டூர் கால்வாயில் யானையின் சடலம் மிதக்கிறது.
உடுமலைப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் யானைகள் உள்ளன. நேற்று இரவு அப்பகுதியில் கன மழை பெய்தது. இன்று காலை கால்வாயில் யானை ஒன்று சடலமாக மிதந்து செல்கிறது. அது மழையால் கால் தவறி கால்வாயில் விழுந்து இறந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கின்றனர்.
கால்வாயில் இருந்து அந்த யானையின் சடலத்தை மீட்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
Comments
Story first published: Thursday, November 11, 2010, 14:57 [IST]