நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு
Subscribe to Oneindia Tamil
தென்காசி: நெல்லை மாவட்டத்தின் பல்வேறு நகரங்களில் இன்று விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
நேற்று நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று 250க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டது.
கடையநல்லூரில் விநாயகர் சிலைகள் கருப்பாநதி ஏரியிலும், செங்கோட்டையில் குண்டாற்றிலும், நெல்லையில் தாமிரபரணி நதியிலும், அம்பையில் தாமிரபரணி நதிக்கரையிலும், தென்காசியில் சிற்றாற்றிலும் விஜர்சனம் செய்யப்பட்டது.
நெல்லை டிஐஜி சண்முகராஜேஸ்வரன், நெல்லை எஸ்பி ஆஸ்ரா கர்க், தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.













Click it and Unblock the Notifications