வெளியான ஒரே நாளில் 2.20 லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்த ஜார்ஜ் புஷ் சுயசரிதை

இவற்றில் 20 சதவீத நூல்கள் ஆன்லைன் மூலம் வாங்கப்பட்டுள்ளன. ரேன்டம் ஹவுஸ் என்ற நிறுவனம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தினர் கூறுகையில், ஜார்ஜ்புஷ்ஷின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியான முதல் நாளிலேயே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
முன்கூட்டியே செய்யப்பட்ட ஆர்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலம் நூல் விற்பனையாகி வருகிறது. முதல் நாளிலேயே 2 லட்சத்து 20 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. இது எங்களது நிறுவன விற்பனை வரலாற்றில் புதிய சாதனையாகும்.
கடந்த 2004ம் ஆண்டு வெளியான பில் கிளிண்டனின் வாழ்க்கை வரலாற்று நூலான My Life வெளியான முதல் நாளில் 4 லட்சம் பிரதிகள் விற்று பெரும் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புஷ் வாழ்க்கை வரலாற்று நூலின் முதல் பதிப்பில் 10.5 லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டுள்ளனவாம். புஷ்வாழ்க்கை வரலாற்று நூல் ஆன்லைன் மூலம் இதுவரை 50,000 பிரதிகள் விற்பனையாகியுள்ளனவாம்.
தனது புத்தகத்தை பிரபலப்படுத்துவதற்காக பல்வேறு புரமோஷன் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் புஷ்.
தான் அதிபராக இருந்த காலத்தில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களை சுயசரிதையில் எழுதியுள்ளார் ஜார்ஜ் புஷ். ஈராக் போர் குறித்த முக்கிய முடிவுகள் குறித்தும் இதில் அவர் விவரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications