4 ஆண்டுக்கு பின் குற்றாலம் குற்றாலநாதசாமி கோவிலில் இன்று தேரோட்டம்
Subscribe to Oneindia Tamil
தென்காசி: குற்றாலம் குற்றாலநாதசாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடக்கிறது. இதற்கான தேர்களை அலங்கரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
குற்றாலம் குற்றால நாதசுவாமி கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்டில் ரூ. 1 கோடி செலவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. திருப்பணிகள் துவங்குவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு தேர்கள் பழுதடைந்ததன் காரணமாக தேரோட்டம் நடைபெறமால் இருந்த நிலையில் தற்போது பல லட்சம் ரூபாய் செலவில் தேர்கள் சீரமைக்கப்பட்டு இன்று காலை 9.15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
இதை முன்னிட்டு சுவாமி, அம்மன், விநாயகர், முருகன் தேர்களை அலங்கரிக்கும் பணி துவங்கியது.












Click it and Unblock the Notifications