கன்னியாகுமரியில் திடீர் கடல் சீற்றம்-படகு சவாரிகள் ரத்து
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனர்.
கன்னியாகுமரியில் நேற்று முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இன்று காலை கடல் சீற்றம் அதிகரித்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு சேவை ரத்து செய்யப்பட்டது.
அதேபோல விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகுகளும் நிறுத்தப்பட்டன. இதனால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் படகு சவாரியை அனுபவிக்க முடியாமல் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகினர்.
கடல் சீற்றம் குறைந்த பிறகுதான் படகுகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications