திருத்தணி அருகே தங்கப் புதையல்: வெள்ளிக் குப்பிக்குள் 23 தங்க நாணயங்கள்

Subscribe to Oneindia Tamil

திருத்தணி: திருத்தணி அருகே தங்கப் புதையல் கிடைத்துள்ளது.

திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிருஷ்ணாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சகுந்தலா (30), மோகனா (31).

இவர்கள் கணவரால் கைவிடப்பட்டு ஆதரவின்றி தவித்தனர்.
இவர்களுக்கு உறைவிடம் கிடைக்க வழிவகுத்தது கலைஞர் வீட்டுவசதி திட்டம். இவர்கள் வீடு கட்டுவதற்காக கிருஷ்ணாகுப்பம் காலனியில் இருக்கும் மலைக் குன்றுகளின் அருகில் உள்ள இடம் ஒதுக்கப்பட்டது.

நேற்று அங்கு வீடு கட்ட பூமியைத் தோண்டியுள்ளனர். அப்போது ஒரு வெள்ளிக் குப்பி கிடைத்தது. அதில் 23 தங்க நாணயங்கள் இருந்தன.

விஷயம் கிராமம் முழுவதும் விஷமாய் பரவியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த பள்ளிப்பட்டு வட்டாட்சியர் ராகவன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அங்கு சென்று நாணயங்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்த நாணயங்கள் சென்னை எழும்பூரில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+