உலக அமைதிக்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 108 நாள் அமைதிப் பயணம்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 108 நாள் காந்திய நெறி அமைதிப் பயணம் நடைபெற உள்ளது.
உலக அமைதிக்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 108 நாள் காந்திய நெறி அமைதிப்பயணம் நடைபெற உள்ளது.
இந்த அமைதிப் பயணம் நாளை கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து துவங்குகிறது. இதை மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் துவக்கி வைக்கிறார்.
கன்னியாகுமரியில் இருந்து துவங்கும் இந்த பயணம் ஆந்திரா, மகாராஸ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், ஹரியானா, டெல்லி, உத்தராஞ்சல், பஞ்சாப், இமாசல பிரதேசம் வழியாக ஜம்மு காஷ்மீரில் நிறைவடைகின்றது.
அதன் பின்பு ஜம்மு காஷ்மீரில் துவங்கும் இந்த பயணம் வரும் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி கன்னியாகுமரியில் நிறைவடைகிறது.












Click it and Unblock the Notifications