ப.சிதம்பரத்தின் மாமியார் செளந்தரா கைலாசம் மரணம்
Subscribe to Oneindia Tamil

84 வயதான செளந்தரா, மறைந்த நீதிபதி பி.எஸ்.கைலாசத்தின் மனைவி ஆவார்.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், கைலாசத்தின் மகள் ஆவார். செளந்தரா கைலாசம் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். தணிக்கைத்துறை, அகில இந்திய வானொலி ஆகியவற்றில் உறுப்பினராக இருந்துள்ளார்.
அளவற்ற அருளாளர் என்ற இஸ்லாமிய நூலை எழுதியுள்ளார். இதன் மூலம் முஸ்லீம் சமுதாயம் குறித்து நூல் எழுதிய முதல் இந்துப் பெண்மணி என்ற பெருமை இவருக்கு உண்டு.
அண்மையில் தமிழக அரசு இவருக்கு பாரதியார் விருது வழங்கி கவுரவித்தது. சிலேடைகளை கவிதைகளில் புகுத்துவதில் வல்லவராகத் திகழ்ந்தவர். சிலேடைச் செல்வராகத் திகழ்ந்த கி.வா.ஜகன்னாதன் மற்றும் அன்றைய தமிழறிஞர்களுடன் நட்பு கொண்டு, தமிழ் மேடைகளில் கவிதை முழக்கமிட்டவர் செளந்தரா கைலாசம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications