சீர்காழியில் தமிழிசை மூவர்களுக்கு மணிமண்டபம்!
சீர்காழி: சீர்காழியில் தமிழிசை மூவர்களுக்கான மணிமண்டபம் கட்டும் பணியை தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதிஇளம்வழுதி தொடங்கி வைத்தார்.
சீர்காழியில் வாழ்ந்த தமிழிசை மூவர்களான முத்துதாண்டவர், அருணாச்சல கவிராயர், மாரி முத்தாப்பிள்ளை ஆகியோர் தமிழில் கீர்த்தனைகள் இயற்றி தமிழுக்கு வளம் சேர்த்தவர்கள்.
அவர்களின் தமிழ் தொண்டினை போற்றும் வகையில், அவர்களுக்கு, 0.44 ஏக்கரில் 358.80 சதுர மீட்டர் பரப்பில் ரூ 1.30 கோடிக்கு மணி மண்டபமும், ரூ .21 லட்சத்தில் வென்கல சிலையும் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதனையடுத்து, மணி மண்டபம் கட்ட ரூ 1.51 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த மணிமண்டப கட்டுமான பணியை தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம் வழுதி தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில், நாகை மாவட்ட கலெக்டர் முனியநாதன், செய்தித்துறை இயக்குனர் (பொ) பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications