கோவில்பட்டி அருகே பழமையான செப்பு நாணயங்கள் பூமிக்கடியில் கண்டெடுப்பு

Subscribe to Oneindia Tamil

கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே இளம்புவனம் கிராமத்தில் பூமிக்கடியில் புதைந்திருந்த செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.

கோவில்பட்டி அருகே உள்ளது இளம்புவனம் கிராமம். இந்த கிராமத்தின் தெற்கு பகுதியில் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு கோயில் கட்ட தோண்டியபோது சிவலிங்கம் கிடைத்தது. இப்பகுதி மக்கள் அந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வழிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கண்மாயை சீரமைப்பு செய்தபோது ஆங்கிலேயர் காலத்து செப்பு நாணயங்கள் கிடைத்தன. சிறிய வட்ட வடிவிலான செப்பு நாணயத்தின் ஒரு பகுதியில் 1835 ஈஸ்ட் இந்தியா கம்பெனி என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டு அதன்பின் பகுதியில் மகாவீரர் தியான நிலையில் அமர்ந்திருப்பது போல் உருவம் இருக்கிறது.

மேலும் 1911 மற்றும் 1935 ஆண்டு செப்பு நாணயங்களும் இப்பகுதியில் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இளம்புவனம் கிராமத்தை சேர்ந்த ஸ்டாலின் வெங்கேடசன் என்பவர் இப்பகுதியில் ஆய்வு நடத்தியபோது யான தந்தங்களிலான வளையல்கள், மோதிரங்கள், கலைநயமிக்க சிற்பங்கள், காப்புகள், குவளைகள், முதுமக்கள் தாழி, வலம்புரி சங்குகள், சிற்ப வேலைகள் நிறைந்த கைவினை பொருட்கள் கிடைத்திருக்கின்றன. இதனை இவர் சேகரித்து வைத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+