For Daily Alerts
Just In
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 'சொல் வங்கி'!
தஞ்சாவூர்: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 'சொல் வங்கி' அமைக்கப்படவுள்ளது.
இது குறித்து துணைவேந்தர் ம. ராசேந்திரன் கூறுகையில்,
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சொல் வங்கி ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
அதற்காக மாதம் ஒரு முறை பத்திரிக்கையாளர்கள், மொழி வல்லுநர்கள் ஆகியோர் கூடி அந்த மாதம் தங்கள் பத்திரிக்கைகளில் வெளியான புதிய சொற்களைக் கண்டறிந்து மக்களுக்கு வழங்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம்.
சொல் வங்கியில் புதிய சொற்களை அளிக்க விரும்பும் பத்திரிக்கையாளர்களும், மாணவர்களும் இதில் பங்கேற்கலாம் என்றார்.
Story first published: Saturday, November 20, 2010, 12:01 [IST]