துபாய் ராஸல் கைமா இந்தியப் பள்ளி விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவருக்கு தங்கப் பதக்கம்
துபாய்: துபாய் ராஸல் கைமா பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவர் தங்கப்பதக்கம் வென்றார்.
துபாயிலிருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ராஸல் கைமா அமீரகம். ராஸல் கைமாவில் இயங்கி வரும் இந்தியப் பள்ளியில் இந்தியா, யு.எ.இ. உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் 2010-11 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகள் சமீபத்தில் நடைபெற்றது.
இப்போட்டிகளில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இப்பள்ளியில் படித்துவரும் தமிழத்தைச் சோ்ந்த மர்ஜூக் ரஹ்மான் என்ற மாணவரும் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களை வென்றார். ஜூனியர் பிரிவில் நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
இவர் கடந்த 3-ம் தேதி நடந்த ஐக்கிய அரபு அமீரக தேசிய நாள் கொண்டாட்டத்தின்போது மாணவர்களுக்காக நடந்த போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூரைச் சேர்ந்தவர்.
பரிசு பெற்ற மாணவரை துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் பொதுச்செயலாளர் குற்றாலம் ஏ. லியாக்கத் அலி, துபாய் தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் சி. ஜெகந்நாதன், அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, வி.களத்தூர்.காம் இணைய இதழின் ஆசிரியர் வி.களத்தூர் ஷா, தினமலர் செய்தியாளர் முதுவை ஹிதாயத் மற்றும் பல்வேறு ஜமாஅத் நிர்வாகிகள் பாராட்டினர்.












Click it and Unblock the Notifications