சச்சினின் ரத்தக் கையெழுத்து இடம் பெற்ற சுயசரிதையின் விலை ரூ. 37.5 லட்சம்

இதை சிறப்பு வெளியீடாக கொண்டு வருகின்றனர். இந்த சிறப்பு வெளியீட்டு நூலின் முதல் பக்கத்தில் சச்சின் ரத்தத்தில் ஆன கையெழுத்து இடம் பெறுகிறது.
இந்த ரத்தப் பதிப்பில் முந்தைய பதிப்பில் வெளியாகாத, சச்சின் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள், பல முக்கியத் தகவல்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த நூலை வெளியிடவுள்ளனர். அந்த மாதத்தில்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 852 பக்கங்கள் இதில் இருக்கும். தங்க இழையால் நூலின் பக்க ஓரங்கள் மூடப்பட்டிருக்கும். மொத்தமே 10 பிரதிகள்தான் வெளியிடப்படவுள்ளது. இதன் எடை 37கிலோவாக இருக்கும்.
இந்த பத்து பிரதிகளும் இப்போதே புக் செய்யப்பட்டு விட்டனவாம். இதுகுறித்து புத்தகத்தை வெளியிடும் கிரேக்கன் மீடியாவின் தலைமை செயலதிகாரி கார்ல் பெளலர் கூறுகையில், சச்சின் ரத்தத்துடன் கூடியதாக வரும் இந்தப் புத்தகம் சிறப்பானதாக கருதப்படும். சச்சின் ரத்தம் கலந்த அவரது சுயசரிதை என்ற உணர்வு அனைவருக்கும் கிடைக்கும்.
சச்சினின் ரத்தம் கலந்த புத்தகம் என்பதால் இதை எல்லோருக்கும் கொடுக்க முடியாது. அனைவரும் சாப்பிடும் சாதாரண டீ அல்ல இது. ஸ்பெஷல் டீ. எனவேதான் பத்து பிரதிகள் மட்டும் வெளியிடுகிறோம் என்றார்.
இது மட்டும் இல்லையாம், சச்சினிடம் உமிழ்நீரை கேட்டுள்ளனராம். அதை டிஎன்ஏ சோதனைக்குக் கொடுத்து அதன் வரைபடத்தையும் அந்த நூலில் பிரசுரிக்கப் போகிறார்களாம்.
இந்த பத்து புத்தகங்களின் விற்பனையில் கிடைக்கும் வருமானத்தை மும்பையில் உள்ள ஒரு அறக்கட்டளைக்கு, பள்ளிக்கூடம் கட்டுவதற்காக கொடுக்கப் போகிறார்களாம்.
இந்த சிறப்பு பதிப்போடு, டெண்டுல்கர் ஓபஸ் சுயசரிதையின் வழக்கமான நூல்கள் ஆயிரத்தையும் வெளியிடவுள்ளனராம்.












Click it and Unblock the Notifications