யுஏஇ இந்தியர்களுக்கு 24 மணி நேர போன் உதவி சேவை: பிரதீபா பாட்டீல் துவக்கம்
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் பணி புரியும் இந்தியர்கள் துன்பத்தில் இருந்து விடுபெற 24 மணி நேர தொலைபேசி சேவை மற்றும் ஆலோசனை சேவையை நேற்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் துவங்கி வைத்தார்.
இந்திய தொழிலாளிகள் மையத்தை பிரதீபா பாட்டீல் திறந்து வைத்தார். இந்த மையம் தொழிலாளிகளின் குறைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தில் 1. 75 மில்லியன் இந்தியர்கள் பணி புரிகின்றனர்.
பிரதீபா பாட்டீல் அரபு நாடுகளில் 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இது போன்ற மையங்களை வளைகுடா நாடுகளிலும் துவங்கத் திட்டமிட்டிருப்பதாக வெளிநாட்டு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.
இவை வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பொருளாதாரம், சட்டம், மனோதத்துவம் குறித்து ஆலோசனையும், உதவியும் அளிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் எம். கே. லோகேஷ் இங்குள்ள இந்தியர்களின் குறைகளைக் களையத் தான் இந்த மையம் துவங்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
இந்த நிகழ்ச்சி இந்தியா கிளப்பில் நடந்தது. இந்த 24 மணி நேரத் தொலைபேசி சேவை உலகிலேயே முதன்முறையாக இந்தியா தான் துவங்கியுள்ளது. இதை வெளிநாட்டு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சகம் துவக்கியுள்ளது.
இது பிரச்சனைகளில் சிக்கி வழி தெரியாமல் தவிக்கும் இந்தியத் தொழிலாளர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications