வல்லம் மணியம்மை பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: வல்லம் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம் வரும் திங்கள் கிழமை (27.09.2010) காலை பத்து மணி முதல் மாலை நான்கு மணி வரை நடைபெற உள்ளது.
காலை பத்து மணிக்குத் தொடங்கும் தொடக்க விழா பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் முதன்மையர் முனைவர் இரா.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. விழாவில் பா.இளங்கவின் அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார். பெரியார் சிந்தனை மையம் பேராசிரியர் அருணாசலம் அவர்கள் அறிமுகவுரையாற்றுகிறார்.
முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்கள் உள்ளிட்ட ஆர்வலர்களுக்குத் தமிழ் இணையப் பயிற்சி வழங்குகின்றார். வ.ஊ.ஈழவேங்கை நன்றியுரையாற்றுகின்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர் மன்றம்& தமிழ் மன்றம் ஏற்பாடு செய்துள்ளன.
நன்றி: http://muelangovan.blogspot.com/












Click it and Unblock the Notifications