செம்மொழி மாநாட்டில் நேற்று ஒரே நாளில் 259 கட்டுரைகள் சமர்ப்பிப்பு
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் நடந்து வரும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் 2வது நாளில் 259 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
நேற்று பகல் 12 மணியளவில் 22 அரங்குகளில் ஆய்வரங்கங்கள் தொடங்கின. மாலை 6 மணி வரை நீடித்த இதில் கலந்து கொண்டு தமிழறிஞர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பேசினர். 259 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
முக்கிய அம்சமாக கலைஞர் கருணாநிதி செம்மொழி விருது பெற்ற பின்லாந்து அறிஞர் அஸ்கோ பர்ப்போலா, கிரிகோரி ஜேம்ஸ், தியோடர் பாஸ்கரன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, சிலம்பொலி செல்லப்பன், நீதியரசர் மோகன், கிறிஸ்டியானா முரு, ரவிக்குமார் எம்.எல்.ஏ., உல்ரிக் நிக்லாஸ், ஆ.சிவதாணுப்பிள்ளை, எஸ்றா சற்குணம் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட அரங்குகளுக்குத் தலைமை தாங்கிப் பேசினர்












Click it and Unblock the Notifications