அபுதாபி இந்திய முஸ்லிம் பேரவை நடத்தும் பத்ர் சஹாபாக்கள் நினைவு பேருரை நிகழ்ச்சி
அபுதாபி: வரும் வெள்ளிக்கிழமை இரவு தராவிஹ் தொழுகைக்குப் பிறகு 9.30 மணி அளவில் பத்ர் போரையும், அதில கலந்து கொண்ட சஹாபாக்களையும் நினைவுகூறம் வகையில் நினைவு பேருரை நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை அபுதாபி இந்திய முஸ்லிம் பேரவை செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி நஜ்தா தெருவில் உள்ள ரெட் டாக் கட்டிடத்தின் (பழைய சனா ஷோரூம்) மூன்றாம் தளத்தில் பிளாட் எண். 304 (ஈ.டி.ஏ. ஹெச்.ஆர்.டி ஹால்)-ல் நடக்கின்றது.
இந்திய முஸ்லிம் பேரவையின் மார்க்கத் துறைச் செயலாளர் மௌலவி அல்ஹாபில் ஹபீபுர்ரஹ்மான் மஹ்ளரி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். கீழக்கரை ஜமாத்துல் இர்பானுல் உலுமின் முதல்வர் மௌலானா மௌலவி எஸ். அப்பாஸ் அலி மன்பயீ, இலங்கை ஜாமியதுல் பாத் பியா அரபிக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி முஹம்மது இஸ்மத்துல்லா பயாசி, ஜமாலி ஆகியோர் தமிழில் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
பெண்களுக்கு தனி இட வசதி உண்டு. இதில் கலந்து கொண்டு முஸ்லிம் மக்களுக்காக துவாச் செய்யுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.