நெல்லையில் தொழில்திறன் பயிற்சி வேலைவாய்ப்பு முகாமில் 2362 பேர் தேர்வு: இன்று முதல் பயிற்சி
நெல்லை: நெல்லையில் நடந்த தொழிற்திறன் பயிற்சி வேலைவாய்ப்பு முகாமில் 2362 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இன்று முதல் தொழிற்திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
நெல்லையில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தொழிற்திறன் பயிற்சி வேலைவாய்ப்பு முகாம் நெல்லை வண்ணார்பேட்டை எப்எக்ஸ் பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. முகாமில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை 8 மணி முதலே ஆண்களும், பெண்களும் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். அவர்களை போலீசார் ஒழுங்குபடுத்தி ஒவ்வொருவராக கல்லூரிக்குள் அனுப்பினர்.
கல்லூரி நுழைவு வாயிலில் 60 தனியார் தொழில் நிறுவனங்களின் பெயர்கள், எந்தெந்த அறைகளில் நேர்முகத்தேர்வு நடக்கிறது, கல்வித் தகுதிகள் போன்றவை அடங்கிய பட்டியல் வைக்கப்பட்டிருந்தன.
அவற்றை பார்த்து தாங்கள் விரும்பிய நிறுவனங்களை இளைஞர்கள் தேர்ந்தெடுத்தனர். பின்னர் அவர்கள் அந்தந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர். நேற்றைய முகாமில் 7400 பேர் பங்கேற்றனர்.
அதில் 2362 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இன்று (29ம் தேதி) முதல் தொழிற்திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications