துபாயில் வளர் தமிழ் தமிழ்த்தேர் 4ம் ஆண்டு விழா
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய், வானலை வளர் தமிழ் தமிழ்த் தேரின் 4வது ஆண்டு விழா ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது.
ஏப்ரல் 9ம் தேதி மாலை 6 மணிக்கு வானலை வளர்தமிழ் - தமிழ்த்தேர்-ன் 4-ஆம் ஆண்டுவிழா துபாய் ஷேக் ரஷீத் அரங்கத்தில் வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது.
மனங்கவரும் கலைநிகழ்ச்சிகள், தாயகத்திலிருந்து சிறப்பு விருந்தினர்கள், கவிஞர்கள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகளுடன் விழா மிகச் சீரும் சிறப்புமாக நடைபெறவிருக்கிறது.
தமிழ் உறவுகளே, அன்பர்களே, நண்பர்களே, விழா சிறப்படைய உங்கள் மேலான ஒத்துழைப்பையும், ஆதரவினையும் வேண்டுகிறோம் என்று வானலை வளர் தமிழ், தமிழ்த் தேர் ஆண்டு விழாக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications