சபரிமலை கோயிலில் 5 கோடி பக்தர்கள் தரிசனம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:​ சபரிமலையில் இந்த சீசனில் சுமார் 5 கோடி ஐயப்ப பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு மாநிலத்தில் இருந்தும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர்.

ஆண்டுதோறும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. நேற்றும் சுமார் 1 லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசனத்துக்காக வந்தனர். 6 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வருகை குறித்து சபரிமலை கோயில் நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் கூறுகையில், 'பக்தர்களுக்கு தூய்மையான தண்ணீர், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம்.​ போலீஸ் பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது.​

மகர ஜோதிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.​ இந்த ஆண்டு இது வரை 14 லட்சம் அரவணைப் பிரசாதம் விற்பனையாகி உள்ளது.​ ​ மகர ஜோதியை முன்னிட்டு 4 லட்சம் கூடுதல் அரவணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் பக்தர்களுக்கு சபரிமலையில் இன்னும் பல்வேறு வசதிகள் செய்யப்படவுள்ளது.​ பக்தர்களுக்கு தங்கும் விடுதி சபரிமலையில் அமைக்க முடியாத காரணத்தினால் அதற்குப் பதில் வேறு இடத்தில் தங்கும் விடுதி அமைக்கப்படும்.​ ​

மலையேற முடியாத பக்தர்களுக்கு தமிழகத்தில் பழனி கோவிலில் இருப்பது போல் ரோப்-கார் வசதி செய்ய திட்டம் உள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+