களக்காடு,முண்டந்துறை காடுகளில் யானைகள் எண்ணிக்கை குறைவு

Subscribe to Oneindia Tamil

விகேபுரம்: களக்காடு, முண்டந்துறை காடுகளில் யானைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் ஓரே நேரத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி மே 15ம் தேதி தொடங்கியது. நேற்றுடன் கணக்கெடுப்பு பணி முடிந்தது.

களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 2007ம் ஆண்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி நடந்த போது அங்கு 27 யானைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2009ம் ஆண்டு கணக்கெடுப்பு நடக்கவில்லை.

இந்தாண்டு கணக்கெடுப்பின் போது அப்பர் கோதையாறு பகுதிக்கு உட்பட்ட ஊத்து என்ற இடத்தில் 2 யானைகளும், முண்டந்துறை வனச்சரகத்தில் 2ம், திருக்குறுங்குடி பகுதியில் 2 யானைகள் இருந்ததை வனத்துறையினர் பார்த்துள்ளனர். கடந்த முறை கணக்கெடுப்பின் போது இருந்ததை விட தற்போது யானைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது கோடை காலத்தில் யானைகள் அருகில் உள்ள கன்னியாகுமரி, கேரள வனப்பகுதிகளுக்கு சென்று விடுகின்றன. இதனாலேயே களக்காடு, முண்டந்துறை வனப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை குறைந்துள்ளன என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+