சென்னையில் சர்வதேச தரத்தில் அண்ணா நூலகம் -ஜூன் மாதம் திறப்பு

சிங்கப்பூரில் உள்ள பிரபலமான தேசிய நூலகத்தை ஒத்த வகையில், தமிழக அரசால் உருவாக்கப்பட்டு வருகிறது அண்ணா நூலகம்.
சென்னை கோட்டூர்புரத்தில் 3.75 லட்சம் சதுரடி பரப்பில் ரூ.170 கோடி செலவில், ஒன்பது அடுக்குமாடி கட்டிடத்தில் இந்த நூலகம் தயாராகி வருகிறது.
இந்நூலகத்தில் சுமார் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமான அனைத்து மொழி நாளிதழ்கள், வார மாத பருவ இதழ்களோடு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைய இதழ்களையும் (இ-மேகசின்) இந்நூலகத்தில் படிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
'இதுவரை அண்ணா நூலகத்துக்காக ரூ.170 கோடி செலவு செய்துள்ளோம். மின்னணு மூலம் பல்வேறு சர்வதேச இதழ்கள் நூலகத்தில் கிடைப்பதற்காக யுனெஸ்கோ உதவியுடன் ஏராளமான பல்கலைக்கழகங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.
அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து வரும் ஜூன் மாதத்தில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு பொது நூலகம் பொதுமக்களுக்காக திறந்துவிடப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications