தேக்கடியி்ல் மீண்டும் படகு சவாரி தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

தேக்கடி: படகு விபத்துக்குப் பின்னர் படகு சவாரி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தேக்கடியில் நேற்று முதல் மீண்டும் படகு சவாரி தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி தேக்கடியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 47 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்துக்கு அதிக அளவில் படகில் ஆட்களை ஏற்றியதும், தரமில்லாத படகை பயன்படுத்தியதுமே காரணம் எனக் கூறப்பட்டது.

இதையடுத்து படகு குழாமில் உள்ள படகுகளின் தரத்தை உறுதி செய்யும் வரை படகுப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கடந்த வாரம் கேரள வனத்துறைக்குச் சொந்தமான இரண்டு படகுகளுக்கும், சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான நான்கு படகுகளுக்கும் தகுதிச் சான்று வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று படகு சவாரி மீண்டும் தொடங்கப்பட்டது. பீர்மேடு எம்.எல்.ஏ. பிஜூமோள் படகு சவாரியைத் துவக்கி வைத்தார். விழாவில் குமுளி பஞ்சாயத்து தலைவர் சியாசக்கீர், வனத்துறை உதவி இயக்குநர் ஜோசப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+